சத்தீஸ்கர் மாநிலத்தின் ஜஷ்பூர் மாவட்டத்தில், மிகவும் விஷமுள்ள பாம்புகள் அதிகம் காணப்படும் இடமாக அறியப்படுகிறது. இந்தப் பகுதியை ‘சர்ப்லோக்’ என்றும் அழைக்கின்றனர். இங்கு ஒரு பெண் விஷமுள்ள பாம்பால் கடிக்கப்பட்டு அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. இதனால் அவர் உயிரைப் பாதுகாக்க குடும்பத்தினரும் கிராமவாசிகளும் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் . தற்போது அந்தப் பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சுரில்கோனா கிராமத்தைச் சேர்ந்த முன்னி பாய் என்ற பெண், ஞாயிற்றுக்கிழமை ஒரு விஷமுள்ள பாம்பால் காலில் கடிக்கப்பட்டார். அந்தப் பாம்பு கரைத் (கரைட்) வகை என்று சந்தேகிக்கப்படுகிறது. பாம்பு கடித்தவுடன் அந்தப் பெண்ணின் உடல்நிலை மோசமடைந்தது. அதன் பிறகு, குடும்பத்தின் இன்னொரு பெண் அவரைத் தனது முதுகில் ஏற்றி மருத்துவமனைக்கு கொண்டு செல்லத் தொடங்கினார். வயல் மற்றும் சேற்று நிறைந்த சாலைகளைக் கடக்க, குடும்பத்தினர் பலர் அந்தப் பெண்ணை மாறி மாறி முதுகில் ஏற்றி, கிராமத்திலிருந்து 5 கி.மீ. தொலைவிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தற்போது அந்தப் பெண்ணின் உடல்நிலை முன்பை விட முன்னேறி உள்ளது.