ஒடிசா மாநில சுகாதாரத்துறை அமைச்சர் நபா கிஷோர் புதிய கட்சி அலுவலகத்தின் திறப்பு விழா ஒன்றிற்கு சென்றபோது பணியில் இருந்த உதவி ஆய்வாளர் கோபால்தாஸ் திடீரென அமைச்சரை துப்பாக்கியால் சுட்டார். உதவி ஆய்வாளர் துப்பாக்கியால் சுட்டதில் அமைச்சர் ரத்த வெள்ளத்தில் சரிந்து உயிரிழந்தார். இந்த சம்பவம் நம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில், தற்போது உதவி ஆய்வாளர் கோபால்தாஸ் அமைச்ரை சுட்டுக் கொன்றதற்கான காரணத்தை கூறியுள்ளார்.

அதாவது உதவி ஆய்வாளர் தன்னுடைய உறவினர் ஒருவருக்கு வேலை வாங்கி தர வேண்டும் என்பதற்காக மூன்று முறை அமைச்சரை சந்தித்துள்ளார். ஆனால் அவருக்கு அமைச்சர் வேலை வாங்கி கொடுக்கவில்லை. மேலும் இதனால் தான் அமைச்சரை சுட்டுக் கொன்றேன் என்று தற்போது உதவி ஆய்வாளர் கோபால் தாஸ் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.