ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் 27ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்று, தேர்தலில் மொத்தம் 77 பேர் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் தேர்தலுக்காக பிரச்சாரம் மிக தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பரப்புரை பணிகளுக்காக வந்த கடலூர் அதிமுகவைச் சேர்ந்த கந்தன், நெஞ்சுவலியால் உயிரிழந்தார்.

அக்ரஹாரம் பகுதியில் அவர் பரப்புரை செய்துகொண்டிருந்தபோது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்தார். இதையடுத்து அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில், அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். உயிரிழந்த கந்தன் அதிமுகவின் ஒன்றிய செயலாளரகவும் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.