தமிழக அரசின் பால்வளத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ்  உள்ள ஆவின் நிறுவனம், பால் மட்டுமல்லாமல்  நெய், தயிர், பாதாம் பவுடர், ஐஸ்கிரீம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களையும் விற்பனை செய்து வருகிறது. இதனால் மக்கள் குறைந்த விலையில் தரமான பொருட்களை வாங்கி பயனடைந்து வந்தனர். இந்நிலையில் ஆவின் பன்னீர் மற்றும் பாதாம் பவுடரின் விலையை ஆவின் நிர்வாகம் உயர்த்தியுள்ளது.

அதாவது ஒரு கிலோ பன்னீர் ரூ.450-க்கு விற்கப்பட்ட நிலையில் ரூ.550 என விலை உயர்த்தப்பட்டுள்ளது. அதே போல், பாதாம் பவுடர் 200 கிராம் ரூ.100-க்கு விற்கப்பட்ட நிலையில் ரூ.120 என விலை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ரூ.250-க்கு விற்கப்பட்ட அரை கிலோ பன்னீர் ரூ.300-க்கும், ரூ.100-க்கு விற்கப்பட்ட 200 கிராம் பன்னீர் ரூ.120-க்கும் விற்கப்படுகிறது.