அமை என்பது இந்து மதத்தில் விஷ்ணுவின் அவதாரம் என்று கூறப்படுகிறது. இதை வீட்டில் சிலையாக வைத்தால் நல்ல பலனை அடையலாம் என்று கூறப்படுகிறது. பொதுவாக இந்து மத நம்பிக்கையின்படி விலங்குகள், பறவைகள் அதிர்ஷ்டத்தை கொடுப்பதாக கருதப்படும் நிலையில் வீட்டில் ஆமை சிலையை வைப்பதால் லட்சுமி தேவியின் ஆசிர்வாதத்தை பெறுவதாக நம்பப்படுகிறது. தீபாவளி,வெள்ளிக்கிழமை, அட்சய திருதியை நேரத்தில் அணிந்தால் மங்களகரமானதாகவும் நிதி நிலைமையும் மேம்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.

வீட்டில் உலோக ஆமை வைத்திருப்பவர்கள் வடக்கு திசையில் வைத்தால் அதுவும் மங்களகரமானதாக பார்க்கப்படுகிறது. ஜோதிட ரீதியாக பார்த்தால் வீட்டில் ஆமை யந்திரம் வைப்பது சிறப்பான பலன்களை கொடுக்கும். வெள்ளிக்கிழமை அல்லது பௌர்ணமி நாள் ஆமை யந்திரம் அமைப்பதற்கு உகந்ததாக கருதப்படுகிறது. இது தவிர சுப நேரத்திலும் வைக்கலாம். பிரதான நுழைவாயிலில் ஆமை படத்தை வைத்தால் வியாபாரத்தில் லாபம் கிடைப்பதோடு எதிர்மறை ஆற்றல் விலகி குடும்பத்தில் அமைதி நிலவும் என்றும் நம்பப்படுகிறது.