ஆப்கானிஸ்தானின் தலைநகரான காபுலில் இஸ்லாமிய மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் நேற்று முன்தினம் மாலை குண்டு வெடிப்பு தாக்குதல் நடந்துள்ளது. இந்த சம்பவத்தில் 7 பேர் படுகாயம் அடைந்த நிலையில் நான்கு பேர் உயிரிழந்ததாக காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக காவல் காவல்துறையின் செய்தி தொடர்பாளர் கூறுகையில் குண்டுவெடிப்பில் காயமடைந்தவர்கள் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே இந்த கொடூர குண்டுவெடிப்பு சம்பவத்தின் காணொளி வெளியாகியுள்ளது. அந்த காணொளியில் கட்டிடம் ஒன்றின் ஜன்னல்கள் வெடித்து சிதறுவதும் உள்ளே நெருப்பு எரிந்து கொண்டிருப்பதும் பதிவாகியுள்ளது.