உத்தர் பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள பந்த்ரா பகுதியை சேர்ந்த பத்தாம் வகுப்பு படிக்கும் சிறுவன் தீக்குளித்து தற்கொலை செய்துள்ளான். சிறுவன் நன்றாக படித்த காரணத்தால் அவரது பெற்றோர் ஸ்மார்ட் போன் வாங்கி கொடுத்துள்ளனர். அதன் பிறகு ஆன்லைனில் கேம் விளையாட தொடங்கிய சிறுவன் பத்தாயிரம் ரூபாய் பெட் கட்டி விளையாடி பணத்தை இழந்ததாக கூறப்படுகிறது.

இதற்காக கடன் வாங்கிய சிறுவன் அதனை திருப்பிக் கொடுக்க முடியாத சூழலில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.