பழமையான தமிழ் மொழி மீது இந்தி உட்பட எந்த மொழியையும் திணிக்க முடியாது என்று தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார். பனாரஸ் பல்கலைக்கழகத்தில் தமிழ் பயிலும் மாணவர்களுடன் இன்று கலந்துரையாடிய ஆளுநர் ரவி, இந்தியாவின் ஆன்மீகம் மற்றும் கலாச்சார தலைநகராக தமிழ்நாடு உள்ளது. சமஸ்கிருதம் மட்டுமே தமிழுக்கு நிகரான பழமை வாய்ந்த மொழியாகும். தமிழை ஆழமாக கற்று அறிஞர்களாக உருவாக வேண்டும் என்று ஆளுநர் தெரிவித்துள்ளார்.