மின் அட்டையோடு ஆதார் எண் இணைக்கும் பொழுது கவனமோடு செயல்பட வேண்டும் என்றும், தகுதியான நபர்களுடைய ஆதாரை மட்டும் இணைப்பதை மட்டுமே உறுதி செய்ய வேண்டும் என்று மின்வாரியம் பொறியாளர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழக மின்வாரியமானது 2.67 கோடி நுகர்வோரின் மின் இணைப்பு எண்ணுடன் அவர்களுடைய ஆதார் எண்ணை இணைக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் ஆதார் எண்ணை மின் இணைப்புடன் இணைப்பதற்கு ஜனவரி 31 கடைசி நாள் என அறிவிக்கப்பட்ட பின் ஒருசிலர் இணைக்காததால்பிப்ரவரி 15 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில், இன்னும் நான்கு நாட்களேமீதம் உள்ள நிலையில் சிலர் ஆதார் எண்ணை இணைக்கவில்லை. இதையடுத்து மின் ஊழியர்கள், ஆதாரை இணைக்காதவர்களின் வீட்டிற்கு நேரடியாக சென்று இணைத்து வருகின்றனர்.