அனைவருக்கும் ஆதார் என்பது மிக முக்கியமான ஆவணம். பள்ளி சேர்க்கை முதல் ரயில் டிக்கெட், சிம்கார்டு என அனைத்து விஷயங்களுக்குமே ஆதார் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் ஆதார் கார்டை எடுக்கும் பொழுது பல தவறுகளை மக்கள் செய்கிறார்கள். இந்த பிரச்சினைகளை சரிசெய்ய ஆதார் அட்டை புதுப்பிக்கும் சேவை அறிமுகம் செய்யப்பட்டது. இதன் மூலம் ஆதார் அட்டையில் ஏதேனும் தவறுகள் இருந்தால் அதை திருத்திக் கொள்ளலாம். உங்களுடைய ஆதார் கார்டில் உள்ள தகவல்கள் ஏதேனும் தவறாக இருந்தால் அதை விரைவில் புதுப்பிக்க வேண்டும்.

இல்லை என்றால் அரசின் சலுகைகளை இழக்க நேரிடும்.  உங்களுடைய ஆதார் அட்டையில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியை ஒரு முறை மட்டுமே மாற்ற முடியும். ஆன்லைனிலேயே அப்டேட் செய்யலாம். அதில் கொடுக்கப்பட்ட அனைத்து தகவல்களையும் கவனமாக படிக்க வேண்டும். ஏனெனில் அனைத்து தகவல்களையும் அடிக்கடி மாற்ற முடியாது. ஆதார் கார்டு தகவல்களை யாருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டாம். இதில் ஏராளமான பயோமெட்ரிக் தரவுகள் உள்ளது. எனவே அதில் கவனமோடு இருக்க வேண்டும். ஆதார் மூலம் தற்போது ஏராளமான மோசடி நடக்கிறது. ஆதார் தகவல்கள் கசிந்து விட்டால் வங்கி கணக்கில் உள்ள பணம் பறிபோய் விடும். எனவே ஆதார் கார்டு மோசடி தவிப்பதற்கு உங்களுடைய ஆதர அட்டையை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.