இந்திய குடிமக்கள் அனைவருக்கும் ஆதார் என்பது தனித்துவமான ஒரு அடையாள ஆவணம் ஆகும். இந்திய குடிமக்கள் அனைவருக்கும் ஆதார் என்பது தனித்துவமான ஒரு அடையாள ஆவணம் ஆகும். ஆன்லைன் வாயிலாகவும், இ – சேவை மையங்கள் வாயிலாகவும் ஆதாரை புதுப்பிக்க, முகவரி மாற்ற உள்ளிட்ட பல சேவைகளை பெற்றுக்கொள்ளலாம். இப்படி ஆதாரில் முகவரியை மாற்றுவதற்கு ஆதாரமாக ஏதாவது சான்றிதழ் வழங்க வேண்டியதிருந்தது.

இந்த நிலையில், ஆதார் அட்டையில் முகவரியை மாற்றுவதற்கு இனி ஆதார சான்றிதழை வழங்க தேவையில்லை. பெற்றோர். குழந்தைகள், வாழ்க்கைத் துணை என யாராக இருந்தாலும் குடும்பத் தலைவரின் ஒப்புதல் மட்டும் இருந்தால் முகவரியை மாற்றிக் கொள்ளலாம். அதற்கென எந்த ஒரு தனி ஆதாரமும் வழங்க தேவையில்லை. இது பல லட்சம் மக்களுக்கு பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.