டெல்லியில் ஜிகலோ செயலி மூலம் ஆண் பாலியல் தொழிலாளி வேலை வாங்கி தருவதாக கூறின 4000 பேரிடம் பண மோசடி செய்யப்பட்டுள்ளது. இந்த செயலி மூலம் ரூ. 40,000 இழந்த ஒரு வாலிபர் டெல்லி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில் சமந்தப்பட்ட செயலியில் ஐபி முகவரியை கொண்டு போலீசார் விசாரணை மேற்கொண்டதில் குற்றவாளிகள் ராஜஸ்தானில் உள்ள ஜெய்ப்பூரில் பதுங்கி இருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து ஜெய்ப்பூர் விரைந்த போலீசார் குல்தீப் மற்றும் சியாம் என்ற இரு இளைஞர்களை கைப்பற்றியுள்ளனர். மேலும் இவர்கள்தான் ஆண் பாலியல் தொழில் வேலை வாங்கி தருவதாக கூறி 4000 பேரிடம் பணம் மோசடி செய்துள்ளனர். மேலும் குல்தீப் மற்றும் சியாம் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.