விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் ஒன்று நீயா நானா. இந்த நிகழ்ச்சியில் சமூகத்தில் பேச முடியாத அல்லது கேட்கப்பட வேண்டிய விஷயங்கள் குறித்து இரண்டு குழுக்களாக பிரிந்து பேசுவார்கள். மேலும் இந்த நிகழ்ச்சி பிரபல தொகுப்பாளர் கோபிநாத் தொகுத்து வழங்குவதால் மக்கள் மத்தியில் நல்ல பிரபலமானது.

இந்த நிலையில் பெண் நண்பர்கள்  மீது அதிக அக்கறை காட்டும் ஆண் நண்பர்கள், அதனை எரிச்சலாக பார்க்கும் பெண்கள் என இரண்டு தரப்பினர்கள் கலந்து  கொண்டு பேசினார்கள். அந்த வகையில் தன்னுடைய தோழிகளை பாதுகாப்பாக பார்த்து கொள்வதற்காக ஒரு குழுவாக செயற்படுகிறோம் என அவர்கள் பேசியுள்ளார்கள். இதனால்  கொந்தளித்த பெண்கள், “ இப்படியெல்லாம் நடந்து கொள்வது இன்னொரு பெற்றோரை பார்ப்பது போல் இருக்கின்றது என்று கூறியுள்ளனர்.

இதற்கு இன்னொரு இளைஞர் தன்னுடைய தோழிக்கு எந்த விதமான தொந்தரவும் வந்துவிட கூடாது என தன்னாள் வர முடியாத சூழலில் தனது நண்பருடன் அனுப்பி வைப்பார்கள் என கூறினார். இதை கேட்ட கோபிநாத்திற்கு சிரிப்பை அடக்க முடியவில்லை. இதனால் வயிறு குலுங்கி குலுங்கி சிரிக்க ஆரம்பித்து விட்டார்.  இந்த புரோமோவில் ப்ரோமோவில் அதிகப்படியான அக்கறை காட்டும் ஆண்களை பெண்கள் கிழித்து தொங்க விட்டுள்ளார்கள்.