இயக்குனர் திருமுருகன் இயக்கத்தில் வெளியான சீரியல் நாதஸ்வரம். இந்த சீரியல் மூலமாக பிரபலமானவர் ஸ்ருதி. அதன் பிறகு பல தொடர்களிலும் நடித்துள்ளார். இவருடைய கணவர் அரவிந்த் பாடி பில்டர் ஆன இவர் ஜெயின் ட்ரெயினராகவும் வலம் வந்தார். இவர் தன்னுடைய உடலை கட்டுக்கோப்பாக பேணுவதில் அதிக நாட்டம் கொண்டவர். இவர்கள் இருவரும் கடந்த சில மாதங்களாக காதலித்து வந்த நிலையில் கடந்த வருடம் மே மாதம் தான் திருமணம் செய்து கொண்டார்கள். மேலும் தங்கள் சமூக வலைதள பக்கத்தில் இவர்கள் இருவரும் தொடர்ந்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு ரசிகர்களை சந்தோஷ படுத்தி வந்த நிலையில் நேற்று முன்தினம் அரவிந்த் மாரடைப்பால் உயிரிழந்தார்.

நிதற்கிடையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பாக அரவிந்த் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவு ரசிகர்களிடையே கவனம் ஈர்த்து வருகிறது. அதாவது  சில மாதங்களுக்கு முன்பாக பாரிஸில் இருந்த வீடியோவை பகிர்ந்து, ‘நல்ல நினைவுகளுடன் இறக்க வேண்டும். நினைவேறாத கனவுகளுடன் அல்ல’ என பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் இறப்பதற்கு முன்பே தன்னுடைய மரணத்தை அரவிந்த் கணித்தாரா என சோகத்துடன்  கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

View this post on Instagram

 

A post shared by arvindshekar (@arvind__shekar)