மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சமயபுரத்தாளே சாட்சி போன்ற பல்வேறு பக்தி படங்களை இயக்கிய ஓம் சக்தி ஜெகதீசன் வயது மூப்பு காரணமாக சென்னையில் இன்று காலமானார். எம்ஜிஆர் நடித்த இதயக்கனி மற்றும் சிவாஜி நடித்த சிரஞ்சீவி உட்பட பல படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார். சரத்பாபு மற்றும் சுமலதா நடித்த திசை மாறிய பறவைகள் படத்தை இயக்கியதற்காக தமிழக அரசின் விருதும் பெற்றார். இவருடைய மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.