இயக்குனர் திருமுருகன் இயக்கத்தில் வெளியான சீரியல் நாதஸ்வரம். இந்த சீரியல் மூலமாக பிரபலமானவர் ஸ்ருதி. அதன் பிறகு பல தொடர்களிலும் நடித்துள்ளார். இவருடைய கணவர் அரவிந்த் பாடி பில்டர் ஆன இவர் ஜெயின் ட்ரெயினராகவும் வலம் வந்தார். இவர் தன்னுடைய உடலை கட்டுக்கோப்பாக பேணுவதில் அதிக நாட்டம் கொண்டவர். இவர்கள் இருவரும் கடந்த சில மாதங்களாக காதலித்து வந்த நிலையில் கடந்த வருடம் மே மாதம் தான் திருமணம் செய்து கொண்டார்கள்.

மேலும் தங்கள் சமூக வலைதள பக்கத்தில் இவர்கள் இருவரும் தொடர்ந்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு ரசிகர்களை சந்தோஷ படுத்தி வந்த நிலையில் நேற்று முன்தினம் அரவிந்த் மாரடைப்பால் உயிரிழந்தார். இந்நிலையில் தனது கணவரின் மரணம் குறித்து இன்ஸ்டாகிராமில் ஸ்ருதி சண்முக பிரியா உருக்கமாக பதிவிட்டுள்ளார். அவரின் பதிவில், உங்கள் உடல் தான் பிரிந்துவிட்டது. உயிர் என்னுடன் இருக்கிறது. உங்கள் மீதான என் அன்பு இப்போது மேலும் அதிகரிக்கிறது, நீங்கள் என்னுடன் இருப்பதாக உணர்கிறேன், உங்களை மிகவும் நேசிக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.