சென்னையில் இன்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம் மற்றும் பண்ருட்டி ராமச்சந்திரன் உடன் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அப்போது ஓ பன்னீர்செல்வம் அணியினர் கூறியதாவது, அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் மீண்டும் உயர் நீதிமன்றத்தை நாடுவோம் பொதுக்குழுவை தான் உச்ச நீதிமன்றம் அங்கீகரித்துள்ளது. ஆனால் எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொது செயலாளர் என குறிப்பிடப்படவில்லை. உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை வைத்து எடப்பாடி பழனிச்சாமி தரப்பு தேர்தல் ஆணையத்தை நாட முடியாது. பொதுக்குழு தீர்மானங்கள் பற்றி உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் எதுவும் கூறப்படவில்லை. மேலும் பொதுக்குழு தீர்மானங்கள் காகிதத்தில் மட்டுமே இருக்கிறது.

அது  இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. தனிக்கட்சி தொடங்குவீர்களா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். அதற்கு நாங்கள் ஏன் தனி கட்சி தொடங்க வேண்டும் உயர் நீதிமன்றத்தை நாடுவோம். மக்களிடம் சென்று நீதி கேட்போம் என பதில் அளித்துள்ளனர். இதனை தொடர்ந்து ஓ பன்னீர்செல்வம் பேசியபோது, மீண்டும் உயர் நீதிமன்றத்தை நாடுவோம் மக்கள் மன்றத்தில் நீதி கேட்போம் தர்ம யுத்தத்திற்கு நல்ல முடிவு கிடைக்கும் வரை தொடர்ந்து போராடுவோம். அது நிச்சயம் நல்ல தீர்ப்பு கிடைக்கும் என கூறியுள்ளார்.

மேலும் உச்ச நீதிமன்ற தீர்ப்பினால் உங்களுக்கு பின்னடைவா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். அதற்கு உச்சநீதிமன்ற தீர்ப்பினால் தங்களுக்கு எந்த விதமான பின்னடைவும் ஏற்படவில்லை எனவும் தற்போது தங்கள் தரப்பு தொண்டர்கள் புதிய உத்வேகத்துடன் செயல்பட தொடங்கி இருக்கின்றார்கள் எனவும் கூறியுள்ளார். ஓபிஎஸ் அணியினர் திமுகவின் பி டீம் என எடப்பாடி பழனிசாமி தரப்பினர் கூறுவதாக செய்தியாளர்கள் கூறினர். அதற்கு எடப்பாடி பழனிசாமி தான் திமுகவின் பி டீமாக செயல்பட்டு  வருகிறார். நாங்கள் எந்த கட்சிக்கும் எந்த டீமும் இல்லை. எனவே திமுகவின் ஏ முதல் இசட் டீம் வரை அவர்கள் தான் என பதில் அளித்து பேசி உள்ளார்.