டிக் டாக் பிரபலமான சூர்யா தேவி தினமும் சினிமா பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் டிக் டாக் பிரபலங்களை திட்டி அதனை வீடியோவாக வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் சூர்யா தேவி அளித்த புகாருக்கு மனு ரசீது கொடுத்தும் விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுக்காமல் பணிகள் இருந்த பெண் காவலர் உட்பட போலீசாரை சூர்யா தேவி தரக்குறைவாக போலீஸ் நிலையம் முன்பு பேசியதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக பெண் போலீஸ் ஏட்டு லாரன்ஸ் மேரி அளித்த புகாரின் பேரில் மணப்பாறை போலீசார் சூர்யா தேவி மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி சிறையில் அடைத்தனர்.