இந்திய கிரிக்கெட் அணி வீரரான தங்கராசு நடராஜன் தன் சொந்த ஊரான சேலம் சின்னப்பம்பட்டியில் “நடராஜன் கிரிக்கெட் மைதானம்” என்ற பெயரில் கிரிக்கெட் மைதானத்தை நிறுவி உள்ளார். இதன் திறப்பு விழாவானது நேற்று முன்தினம் நடைபெற்றது. இதையடுத்து அந்த கிரிக்கெட் மைதானத்தை இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கிரிக்கெட் வீரர்கள் வருண் சக்கரவர்த்தி, விஜயசங்கர், சாய் கிஷோர் போன்றோர் பங்கேற்றனர். மேலும் நடிகர் யோகி பாபு, நடிகர் புகழ் ஆகியோர் பங்கேற்றனர்.

இந்த நிலையில் நடிகர் யோகிபாபு கூறியிருப்பதாவது “நானும் ஒரு கிரிக்கெட் மைதானம் கட்டி கிரிக்கெட் வீரர் நடராஜன் போல் நிறைய வீரர்களை உருவாக்க வேண்டும் என ஆசை இருக்கிறது. ஐபிஎல், டிஎன்பிஎல் இளைஞர்கள் விளையாடுகிறார்கள். அனைவருடைய பங்களிப்பும் திறமையாக இருக்கிறது. இதனிடையே நான் கிரிக்கெட் தொடர்பான படம் நடிக்க இருக்கிறேன்” என்று அவர் தெரிவித்தார்.