இந்தியாவில் கொரோனா தொற்று அதிதீவிரமாக பரவ தொடங்கியுள்ளது. நேற்று கொரோனா பாதிப்பு 10,158ஆக இருந்த நிலையில் இன்று 11,109ஆக அதிகரித்துள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,47,97,269ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை புதிய உச்சத்தை தொட்டதால் கடும் கட்டுப்பாடுகள், இரவு நேர ஊரடங்கு விதிப்பது குறித்து மத்திய, மாநில அரசுகள் விரைவில் ஆலோசிக்கும் என தெரிகிறது.

இந்நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரைக் கிளையில் இனி முக கவசம் கட்டாயம் என அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.