16வது ஐபிஎல் சீசன் தொடர் சமீபத்தில் நடந்து முடிந்தது. இதில் ஐந்தாவது முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த தொடரில் சென்னை அணியின் கேப்டன் தோனி முழங்காலில் ஏற்பட்ட காயத்தால் கடும் அவதி அடைந்து வந்தார். இதனைத் தொடர்ந்து கோப்பையை வென்றது மும்பையில் உள்ள மருத்துவமனையில் ஆபரேஷன் செய்யப்படும் என்று கூறப்பட்டது.

இந்நிலையில் அறுவை சிகிச்சைக்கு முன்னதாக தோனி கையில் பகவத் கீதை வைத்துக் கொண்டிருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. நேற்று காலை 8 மணிக்கு தோனிக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது.