கர்நாடகாவில் ரெகுலர் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்ட பியு கல்லூரிகளில் காலியாக உள்ள உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். அனைத்து பள்ளிகளிலும் போதுமான உடற்கல்வி ஆசிரியர்கள் இல்லாததால் மாணவர்களின் விளையாட்டு திறன் பாதிக்கப்படுவதாகவும் மாணவர்களின் உடற்கல்வி வகுப்புகள் இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்த நிலையில் உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள் அனைத்தும் விரைவில் நிரப்பப்படும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அது மட்டுமல்லாமல் உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள் முன்னுரிமை அடிப்படையில் நிரப்பப்படுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அவர் 500 மாணவர்களுக்கு ஒரு உடற்கல்வி ஆசிரியரை நியமிக்க உள்ளதாகவும் அரசு பள்ளிகளுக்கு இணையாக அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.