விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே அரசு கல்லூரி கட்டுமான பணியின் போது மின்சாரம் தாக்கியதில் 2  பள்ளி மாணவர்கள் பரிதாபமாக பலியாகினர். மேலேந்தலில் புதிதாக கட்டப்பட்டு வரும் கலைக்கல்லூரி கட்டுமான பணியின் போது மின்சாரம் தாக்கியது. கோடை விடுமுறையால் மாணவர்கள் ரவி, ஹரீஷ் கட்டுமான பணிக்கு சென்ற போது மின்சாரம் தாக்கி விபரீதம் நடந்துள்ளது..