உத்திரபிரதேசம் மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் அரசு ஊழியர்களுக்கு நற்செய்தியை வழங்கியுள்ளது. அதாவது டி ஏ வை நான்கு சதவீதம் உயர்த்தி முடிவு எடுக்கப்பட்டுள்ளது. வரும் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்திய முடிவால் டி ஏ 38 சதவீதத்திலிருந்து 48 சதவீதம் உயரும்.

தனிடையே இந்த அறிவிப்பால் மாநிலத்தில் உள்ள 16.35 லட்சம் ஊழியர்களும், 11 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயன் அடைவார்கள். அடுத்த ஆண்டு நாடாளுமன்ற பொது தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பாஜக ஆளும் மாநிலங்களில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.