மத்திய அரசு சமீபத்தில் சிவராத்திரியை முன்னிட்டு ஊழியர்களுக்கு அகலவிலைப்படியை நான்கு சதவீதம் உயர்த்தி அறிவித்தது. இதனைத் தொடர்ந்து பல மாநில அரசுகள் அகலவிலைப்படி உயர்வு குறித்து அறிவிப்பை வெளியிட்டு வரும் நிலையில் தற்போது மத்திய பிரதேசம் மாநில அரசு ஊழியர்களுக்கு நான்கு சதவீதம் அகலவிலைப்படியை உயர்த்தி உள்ளதாக அறிவித்துள்ளது.

அதன்படி இதுவரை 42 சதவீதம் DA பலன்களை பெற்று வந்த ஊழியர்கள் இனி 46 சதவீதம் DA உயர்வை பெறுவார்கள். இந்த உயர்த்தப்பட்ட அறிவிப்பு 2024 ஆம் ஆண்டு மார்ச் 1 முதல் அமலுக்கு வரும். ஏப்ரல் மாதம் முதல் இதன் பலன்களை ஊழியர்கள் பெற முடியும். இதன் மூலமாக சுமார் 49.18 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 67.95 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயன் அடைவார்கள்.