பொதுவாக வருடத்திற்கு ஜனவரி, ஜூலை ஆகிய 2 மாதங்களில் முறையே அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் திருத்தப்படுகிறது. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தும் அடிப்படையில் மத்திய அரசானது தன் ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 3% முதல் 4% வரை உயர்த்தக்கூடும் என செய்திகள் வெளியாகி உள்ளது.

இது ஜூலை 1 முதல் நடைமுறைக்கு வரும் என சொல்லப்படுகிறது. சென்ற மாதம் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 4% உயர்த்தப்பட்டு, ஊழியர்களுக்கான மொத்த அகவிலைப்படி 38 சதவீதம் ஆக உயர்ந்தது. இந்த அகவிலைப்படி திருத்தமானது ஜனவரி 1, 2023 முதல் அமலுக்கு வந்தது.

இதற்கு முன்பாக சென்ற 2022-ம் வருடம் செப்டம்பரில் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 4% ஆக உயர்த்தப்பட்டது. இந்த DA திருத்தமானது ஜூலை 2022 முதல் அமலுக்கு வந்தது. அகவிலைப்படி உயர்வின் வாயிலாக 47.58 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 69.76 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.