அயோத்தி ராமர் கோவில் பிரதிஷ்டை விழா தொடர்பாக தவறான தகவல்களை வெளியிட வேண்டாம் என்று தொலைக்காட்சி ஊடகங்கள் மற்றும் சமூக ஊடக தளங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தியில், ராமர் கோவில் மூலவர் பிரதிஷ்டை விழா குறித்து உறுதிப்படுத்தப்படாத வன்முறையை தூண்டும் வகையிலான தவறான தகவல்கள் ஊடகங்களில் குறிப்பாக சமூக ஊடகங்களில் பரப்பப்படுகிறது.

இது போன்ற தவறான தகவல்களை வெளியிடுவதையும் ஒளி பரப்புவதையும் பத்திரிகையாளர்களும் தனியார் தொலைக்காட்சியை சேனல்களும் செய்து வெளியீட்டாளர்களும் முற்றிலும் தவிர்க்க வேண்டும். சமூக ஊடக தளங்களும் இத்தகைய தவறான தகவல்களை காட்சிப்படுத்துவதை அல்லது வெளியிடுவதை தவிர்க்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.