அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று சிறப்பாக நடந்தது. இந்த விழாவை முன்னிட்டு பல்வேறு பகுதிகளிலும் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன.

அவ்வகையில் சீதையின் பிறப்பிடமாக நம்பப்படும் நேபாள நாட்டின் ஜனக்பூர் பகுதியிலும் கோவில்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதனிடையே ஜனக்பூரை சேர்ந்த பக்தர்கள் 2.5 லட்சம் அகல் விளக்குகளை ஏற்றி வழிபாடு செய்தனர்.