சீனாவின் தெற்கே அமைந்துள்ள ஜின்ஜியா மாகாணத்தில் நேற்று இரவு பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 7.2 ரிக்டர் அளவில் பதிவான இந்த நிலநடுக்கம் 80 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து எந்த தகவலும் வெளிவராத நிலையில் இதன் அதிர்வு டெல்லி உள்ளிட்ட பிற இந்திய பகுதிகளிலும் உணரப்பட்டதாக கூறப்படுகிறது.