அமைச்சர் செந்தில் பாலாஜியின் உதவியாளர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாடு மின்சார வாரியத்தில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் காசி. இவர் செந்தில் பாலாஜியின் உதவியாளராகவும் இருந்துள்ளார். இந்நிலையில், இன்று சென்னை, காஞ்சிபுரம் என தமிழ்நாடு முழுவதும் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

அதே போல், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காசியின் வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மின்சார வாரியத்திற்கு கன்வேயர் பெல்ட் மற்றும் உபகரணங்களை வழங்கும் நிறுவனங்கள், ஒப்பந்ததாரர்கள், இடைத்தரகர்கள் உள்ளிட்டோர் தொடர்புடைய இடங்களில் சோதனை நடக்கிறது.