அமெரிக்காவில் அடுத்த வருடம் பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் முன்னாள் அமெரிக்க அதிபரான டொனால்ட் டிரம்ப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் அமெரிக்காவின் டுர்காம் நகரில் டிரம்ப் பேசியபோது “ஆசியா, ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல கண்டங்களில் உள்ள நாடுகளிலிருந்து அகதிகள் அமெரிக்காவிற்குள் குவிந்து வருகின்றனர்.

இந்த அகதிகளால் நம் நாட்டு ரத்தம் விஷமாகி கொண்டிருக்கிறது. அவர்கள் உலகம் முழுவதிலும் இருக்கும் சிறைச்சாலைகள், மனநல காப்பகங்கள் உள்ளிட்ட இடங்களை விஷமாக்கி வருகின்றனர். நான் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால் நாட்டிற்குள் சட்ட விரோதமாக லட்சக்கணக்கான அகதிகள் நுழைவதை ஒலித்து விடுவேன்” எனக் கூறியுள்ளார்.