அமெரிக்க செனட் சபையில் ஜெப் மார்க்லே, பில் ஹாகர்டி, ஜான் கார்னின் ஆகிய மூன்று எம்.பி.களும் இணைந்து அருணாச்சல பிரதேசம் விவகாரம் தொடர்பாக ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளனர். அதில் கூறியிருப்பதாவது “அருணாச்சல பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி ஆகும். நாங்கள் இந்தியாவின் இறையாண்மை பிராந்திய நேர்மையை மதிக்கின்றோம்.

சீனா தன்னுடைய ராணுவ பலத்தை பயன்படுத்தி எல்லை பகுதியில் இந்தியாவின் எல்லைப் பகுதியில் தொடர்ந்து அத்துமீறல்களை செய்து வருகின்றது. இதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம். அச்சுறுத்தல்களையும் அத்துமீறல்களையும் சமாளிக்க இந்தியா மேற்கொள்ளும் தற்காப்பு நடவடிக்கைகளை நாங்கள் பாராட்டுகின்றோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.