அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் இருந்து நான்கு பயணிகளுடன் ஹெலிகாப்டர் ஒன்று புறப்பட்டது. அலாஸ்கா ஏரி பகுதியில் பறந்து கொண்டிருந்து. இந்நிலையில் திடீரென ஹெலிகாப்டர் விமானியின் கட்டுப்பாட்டை இழந்து ஏரிக்குள் விழுந்து விபத்து ஏற்பட்டது.

இந்த சம்பவத்தில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த நான்கு பேரும் உயிரிழந்தனர். இது குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த காவல் துறையினர் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.