அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் ராதாகிருஷ்ணன் கோவில் ஒன்று அமைந்துள்ளது. இந்த கோவிலில் நேற்று அதிகாலை 2 மணி அளவில் திருட்டு நடந்துள்ளது. கோவில் உண்டியல் திருடப்பட்டதை தொடர்ந்து வழக்கு பதியப்பட்ட நிலையில் காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது ஆறு பேர் கொண்ட கும்பல் கோவிலின் அருகில் நிற்பதும் அதில் இருவர் மட்டும் கோவிலுக்குள் சென்று உண்டியலை திருடி வந்ததும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து காவல்துறையினர் மர்ம கும்பலை தேடி வருகின்றனர். கோவிலில் இருந்து திருடுபட்ட பொருட்கள் பற்றிய விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை என்று கூறப்படுகிறது.