டெல்லியை சேர்ந்த பெண் ஒருவர் புகாரி பகுதியில் வாடகைக்கு வீடு தேடி அலைந்து உள்ளார். அப்போது வீடு பார்த்து தரும் தரகர் என்று ஜிதேந்திர சவுத்ரி மற்றும் அவரது நண்பர் என இருவர் அந்த பெண்ணிற்கு அறிமுகம் ஆகியுள்ளனர். இந்நிலையில் அவர்கள் இருவரும் ஒரு குடியிருப்பு பகுதியில் பிளாட் வாடகைக்கு கிடப்பதாக கூறி அந்த பெண்ணை அழைத்துச் சென்றுள்ளனர்.

அங்கு அந்த பெண்ணிற்கு குடிக்க தண்ணீர் கொடுத்த நிலையில் அதை குடித்த பெண் சிறிது நேரத்திலேயே மயங்கி விட்டார். பின்னர் அவரை இருவரும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மயக்கம் தெளிந்த பெண் தனக்கு நேர்ந்த கொடுமையை உணர்ந்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.