நைஜீரியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள கரீம் லாமிடோ மாவட்டத்தில் உள்ள ஆற்றில் படகு ஒன்று நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகளுடன் பயணம் செய்தது. அந்த படகில் அளவுக்கு அதிகமான பயணிகள் இருந்ததால் திடீரென ஆற்றில் படகு கவிழ்ந்தது.

இதில் பயணிகள் அனைவரும் தண்ணீரில் தத்தளித்த நிலையில் மீட்பு குழுவினர் மீட்பு பணியில் விரைந்து ஈடுபட்டனர். படகு கவிழ்ந்த இந்த விபத்தில் 18 பேர் உயிரிழந்த நிலையில் 14 பேர் மீட்கப்பட்டுள்ளனர். 70-க்கும் அதிகமானோர் மாயமாகியுள்ள நிலையில் மீட்பு குழுவினர் அவர்களை கேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.