உக்ரைனில் ரஷ்யாவால் அபகரிக்கப்பட்ட பகுதியில் உள்ள ஒரு வீட்டில் 9 பேர் தூக்கத்திலேயே சுட்டு படுகொலை செய்யப்பட்ட நிலையில் படுக்கையில் கிடந்துள்ளனர். உக்ரைனை சேர்ந்த அந்த 9 பேரில் இரண்டு குழந்தைகளும் அடங்குவர்.

இந்த கொடூர சம்பவத்தின் பின்னணியில் ரஷ்யா இருப்பதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக உக்ரைன் வழக்கறிஞர் ஒருவர் X வலைதள பக்கத்தில் பதிவிட்டு இது போர் குற்றம் என்றும் இது குறித்து விசாரணை மேற்கொண்டு தண்டனை வழங்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.