அரசு மருத்துவரிடம் 51 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய வழக்கில் கைதான அமலாக்கத்துறை அதிகாரி அங்கி திவாரிக்கு டிசம்பர் 15ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து திண்டுக்கல் முதன்மை நீதித்துறை நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கு முன்னதாக மதுரையில் உள்ள அங்கி திவாரி வீடு மற்றும் மதுரை அமலாக்கத்துறை அலுவலகம் ஆகியவற்றில் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்த பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டு 15 மணி நேர விசாரணைக்கு பிறகு அங்கி திவாரி திண்டுக்கல் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். அங்கு அவருக்கு டிசம்பர் 15ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து உத்தரவிடப்பட்டது.