ED அதிகாரி அங்கி திவாரிக்கு சொந்தமான இடங்களில் நேற்று சோதனை நடைபெற்ற நிலையில் அதன் பிறகு அவரிடம் நடத்திய விசாரணையில், லஞ்ச பணத்தில் தமிழகத்தில் உள்ள பல ED அதிகாரிகளுக்கும் அவர் பிரித்துக் கொடுத்தது தெரியவந்தது. இந்த நிலையில் மதுரையை தொடர்ந்து சென்னை உட்பட தமிழகம் முழுவதும் உள்ள ED அலுவலகங்களில் சோதனை செய்ய மாநில லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதனால் அங்கி திவாரியுடன் தொடர்புடைய ED அதிகாரிகள் அனைவரும் கலக்கத்தில் உள்ளனர்.