ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் 27ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்று, தேர்தலில் மொத்தம் 77 பேர் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் தேர்தலுக்காக பிரச்சாரம் மிக தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது.  அந்தவகையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் EVKS இளங்கோவனை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது, சசிகலா காலில் இபிஎஸ் விழுந்த புகைப்படத்தை மக்களிடம் காட்டி பரப்புரை செய்தார். சட்டமன்ற தேர்தலின் போது, எய்ம்ஸ் கல்லை கட்டி பிரச்சாரம் செய்த உதயநிதி தற்போது இந்த புகைப்படத்தை காட்டி, காலில் விழுந்து CM பதவி பெற்ற இபிஎஸ்-க்கு மீசையை பற்றி பேச அருகதை இல்லை என்று விமர்சித்தார்.