தமிழக ரேஷன் கடைகளில் ஏழை எளிய மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையில் சீனி, பருப்பு, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. மக்களும் இதை வாங்கி பயனடைந்து வருகின்றனர். இதற்கிடையில் ஒரு சில ரேஷன் கடைகளில் வேலை செய்யும் ஊழியர்கள் ரேஷன் அரிசிகளை கடத்துவதாக புகார் எழுந்து வருகிறது.  ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட ரேசன் கடை பணியாளர்களை உடனுக்குடன் இடைநீக்கம் செய்ய வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும் ரேஷன் அரிசி கடத்துவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்து இருந்தது. இந்நிலையில் கர்நாடக அரசைபோல தமிழக அரசும் ரேஷன் திருட்டை தடுக்க முக்கிய  நடவடிக்கையை கையில் எடுத்துள்ளது. அதாவது  ரேஷனில் விற்கப்படும் பொருள்களை வெளி சந்தையில் விற்பனை செய்தால் அவர்களின் கார்டு ரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.