தமிழகம் முழுவதும் மின்வாரியத்தால் கடந்த ஜூலை 24ஆம் தேதி முதல் மின் இணைப்புகளுக்கான சிறப்பு பெயர் மாற்றம் செய்யும் முகாம் நடைபெற்று வரும் நிலையில் இன்னும் ஒரு வார காலம் மட்டுமே நடைபெறும் என அரசு அறிவித்துள்ளது. மின் நுகர்வோர்கள் தங்களின் இணைப்புக்கான விவரங்களை புதுப்பிக்கும் விதமாக மின் இணைப்புகளில் உள்ள பெயரை மாற்றும் வகையில் தமிழகம் முழுவதும் சிறப்பு பெயர் மாற்றம் முகாம் மின்வாரியம் ஏற்பாடு செய்தது.

அதன்படி கடந்த ஜூலை 14ஆம் தேதி முதல் தமிழகத்தில் இந்த முகாம் நடைபெற்று வரும் நிலையில் 708 ரூபாய் கட்டணம் சமர்ப்பித்து மின் இணைப்பு பெயர் மாற்றம் உள்ளிட்ட சேவைகளை பெற்றுக் கொள்ளலாம் என மின்வாரியம் அறிவித்துள்ளது. இந்நிலையில் இன்னும் ஒரு வார கால அவகாசம் மட்டுமே இருக்கும் இந்த சிறப்பு முகாமை மக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது.