கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பகலவன் பணியாற்றி வந்துள்ளார்.  அதன் பின் காஞ்சீபுரம் சரக டி.ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்றார். இதையடுத்து மதுரை இணை கமிஷனராக பணியாற்றி வந்த மோகன்ராஜ் என்பவர் கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக, நியமிக்கப்பட்டார். அதன் பின், நேற்று தச்சூரில் உள்ள அலுவலகத்தில் கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக மோகன்ராஜ் பொறுப்பேற்ற பின், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது, அரசிற்கு நற்பெயர் பெற்று தரும் வகையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கு பாதுகாக்கப்படும். முதல்-அமைச்சரின் அறிவுறுத்தலின்படி வாரந்தோறும் பொதுமக்களின்  குறைகள் கேட்கப்படும். மேலும் அவர்கள் கொடுக்கும் மனுக்களை நிறைவேற்ற முனைப்போடு செயல்படுத்துதல் மற்றும் காவல்துறை பணியாளர்களோடு இணைந்து பொதுமக்களின் குறைகளை உடனுக்குடன் விசாரித்து அதற்கு நல்ல தீர்வை காண்பேன்.

இந்நிலையில் கந்துவட்டி வசூலிப்பவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து, கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை, சின்னசேலம் போன்ற நகரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதையடுத்து கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபடுபவர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அதனை மீறி, கஞ்சா விற்பனையில் ஈடுபட்டால் அவர்களின் சொத்துகளை முடக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.