உலக நாடுகளில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு பல நாடுகளும் சிறப்பு சலுகைகளை வழங்கி வருகின்றன. அதன்படி தைவான் அரசை இந்த வருடம் சுமார் 5 லட்சம் சுற்றுலாப் பயணிகளுக்கு ரொக்கப் பரிசு வழங்க உள்ளதாக புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது சுற்றுலா பயணிகளுக்கு சுமார் 13,000 வெகுமதி வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்த வருடம் பிரபல சுற்றுலா தளத்தில் ஆறு மில்லியன் சுற்றுலா பயணிகள் வர வைக்க வேண்டும் என்பதை நோக்கமாக கொண்டுள்ளது. இந்த எண்ணிக்கை 2024 ஆம் ஆண்டு அப்படியே இரட்டிப்பாக வேண்டும் எனவும் 2025 ஆம் ஆண்டு சுமார் பத்து மில்லியன் சுற்றுலா பயணிகளை வரவைப்பதற்கு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.