இலங்கையில் மார்ச் 9ஆம் தேதி உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாது என அந்த நாட்டின் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இலங்கையில் நிலவி வரும் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக அந்த நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாடு ஏற்பட்டு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பொருளாதாரம் நெருக்கடிகளை சமாளிப்பதற்காக இலங்கை அரசுக்கு இந்தியா உட்பட பல நாடுகள் கடன் உதவி வழங்கியுள்ளன.

இதற்கிடையே இலங்கையில் மார்ச் 9-ம் தேதி உள்ளாட்சித் தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் பொருளாதார நெருக்கடி காரணமாக தேர்தலுக்கு போதுமான நிதி ஒதுக்க முடியாத சூழல் நிலவுகிறது. இந்த நிலையில் தேர்தலை தள்ளி வைப்பதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக நேற்று அறிவித்துள்ளது. தேர்தல் நடக்கும் தேதி குறித்த அறிவிப்பாணை மார்ச் 3-ம் தேதி வெளியாகும் என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.