மேற்குவங்க மாநிலத்தில் கல்லூரி மற்றும் பள்ளியில் தொடர்ந்து பல ராகிங் மற்றும் பாலியல் சம்பவங்கள் நடந்து வருவதால் அரசு தற்போது முக்கியமான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. அதன்படி மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு பெண்கள் மற்றும் தனியார் பள்ளிகளிலும் சிசிடிவி கேமராக்கள் கட்டாயம் பொருத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

அரசு பள்ளிகளுக்கான சிசிடிவி கேமரா செலவை மாநில அரசு ஏற்றுக்கொள்ளும் எனவும் தனியார் பள்ளிகள் சொந்த செலவில் சிசிடிவி கேமராக்களை பொருத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் விரைவில் பள்ளிகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களின் எண்ணிக்கை குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.