ஆந்திரப் பிரதேச முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான என் சந்திரபாபு நாயுடு, ஊழல் வழக்கில் குற்றப் புலனாய்வுத் துறையினரால் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டார். சந்திரபாபு நாயுடு தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில், கடந்த 45 ஆண்டுகளாக தெலுங்கு மக்களுக்கு தன்னலமின்றி சேவை செய்து வருகிறேன்.

தெலுங்கு மக்களின் நலன்களைப் பாதுகாப்பதற்காக என் உயிரைத் தியாகம் செய்யத் தயாராக இருக்கிறேன். தெலுங்கு மக்களுக்கும், எனது ஆந்திராவுக்கும், எனது தாய்நாட்டிற்கும் சேவை செய்வதை பூமியில் உள்ள எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என பதிவிட்டுள்ளார்.