கொல்கத்தாவில் உள்ள ஆதரவற்றோர்கள் இல்லத்தில் கொடூர சம்பவம் ஒன்று நடந்துள்ளது. பார்வையற்ற மூன்று சிறுமிகள் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக பலாத்காரம் செய்யப்பட்டு வந்துள்ளனர். அந்த ஆதரவற்றோர் இல்லத்தின் நிறுவன இயக்குனர் ஜபேஷ் தத்தா மற்றும் அந்த காப்பகத்தின் சமையல்காரர் பப்லு குண்டு ஆகியோர் இந்த கொடூர செயலில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த கொடூரம் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்ததையடுத்து, அவர்களை போலீசார் சனிக்கிழமை கைது செய்தனர். காப்பகத்தின் முதல்வர் கபேரி தாசையும் கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.