தமிழகத்தில் புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இதனைத் தொடர்ந்து அனைத்து பள்ளிகளுக்கும் அறிவுரை பட்டியலை அரசு அனுப்பியுள்ளது. அதன்படி பள்ளி வளாகம் தூய்மை செய்யப்பட்டிருக்க வேண்டும் எனவும் உடைந்த பொருட்கள் அப்புறப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். விளையாட்டு திடலை மேம்படுத்த வேண்டும் உள்ளிட்ட அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது.