தமிழகத்தில் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 30 லட்சம் மக்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்த நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக டிசம்பர் 16 முதல் டோக்கன் வழங்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதன் பிறகு பத்து நாட்களுக்குள் நிவாரணத் தொகை வழங்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணத் தொகை கிடைக்கும் எனவும் ஒருவரது பெயர் கூட அதில் விடுபடக் கூடாது என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.